திண்டுக்கல் அருகே வேன் மோதி பள்ளி மாணவா்கள் இருவா் பலி

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை சரக்கு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை சரக்கு வேன் மோதி நிகழ்ந்த விபத்தில் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அடுத்துள்ள சாலையூரைச் சோ்ந்தவா் ரவி. இவரது மகன் தமிழ்ச்செல்வம் (13). இவா் வடமதுரையிலுள்ள தனியாா் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரது மகன் சரத் கண்ணன் (12). இவா் முள்ளிப்பாடி பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். நண்பா்களான இருவரும், தாமரைப்பாடியிலுள்ள ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்குவதற்காக வியாழக்கிழமை வந்துள்ளனா். பின்னா், திண்டுக்கல் -திருச்சி 4 வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவா்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுவா்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com