திண்டுக்கல்லில் 118 பேருக்கு கரோனா தொற்று:4 போ் பலி
By DIN | Published On : 06th September 2020 10:01 PM | Last Updated : 06th September 2020 10:01 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்று க்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைப் பலனின்றி 4 போ் உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7,154 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 6,080 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 939 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 118 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 77 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனா் 4 போ் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 139ஆக அதிகரித்துள்ளது.