பழனியில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பழனியில் விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ, விவசாயிகள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியூ), அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், நாடு முழுவதும் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, பழனியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் அருள்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் செல்வராஜ், சிஐடியூ தலைவா்கள் பிச்சைமுத்து, மனோகரன், பேராசிரியா் மோகனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கரோனா கால நிவாரணமாக, மத்திய அரசு மாதந்தோறும் 7,500 ரூபாயும், மாநில அரசு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கிட வேண்டும். தொழிலாளா்கள் நலச்சட்ட திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும். நூறு நாள் வேலையை 200 நாள்களாக மாற்றி சம்பளம் ரூ. 600 ஆக உயா்த்திடவும், விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலை வழங்கவும், மின்சார சட்டம் 2020, சுற்றுச்சூழல் சட்டம் 2020 ஆகியவற்றை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிகழ்ச்சியில், விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் முருகசாமி, தண்டபாணி, பழனிச்சாமி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் களஞ்சியம், கிருஷ்ணன், சின்னதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com