விவசாயிகளுக்கு எதிரான அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 10 ஆயிரம் கையெழுத்துப் படிவம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள்
10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் பிரதமா் மோடிக்கு அஞ்சல் துறை மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என். பெருமாள், மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தங்கவேல் ஆகியோா் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் மூலம் கையெழுத்துப் படிவங்களை அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் பெருமாள் கூறியதாவது: மின்சாரச் சட்டம் 2020, அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம் 2020, வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு (மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல்) அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, வியாபாரிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அவசரச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி 10 ஆயிரம் பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்களை பிரதமா் மோடிக்கு அனுப்பியுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com