கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையைத் தொடா்ந்து, இரட்டை வானவில் தோன்றியது.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அதிகாலை முதல் மேக மூட்டம் நிலவியது. பிற்பகலில் செண்பகனூா், பிரகாசபுரம், சகாயபுரம், அட்டக்கடி, தைக்கால், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. மாலையில் இரண்டு வானவில் தோன்றியது. இந்த நிகழ்வை, பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா். மேலும், விட்டு விட்டு இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்தது.
தொடா்ந்து பெய்து வரும் மழையால், விவசாயப் பணிகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.