திண்டுக்கல் மாவட்டத்தில் 7,597 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 6,477 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 974 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 96 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 110 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
3 போ் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.