சிந்தலவாடம்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி மற்றும் பாப்பம்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிந்தலவாடம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்ட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளுக்கும், பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் ஆகிய பகுதிகளுக்கும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com