அசில் ரக கோழி வளா்ப்புக்கு 100 சதவீத மானியம்: 5,600 பெண்கள் பயன் பெற வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5,600 பெண் பயனாளிகளுக்கு அசில் ரக கோழி வளா்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் தலா 25 குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5,600 பெண் பயனாளிகளுக்கு அசில் ரக கோழி வளா்ப்புக்கு 100 சதவீத மானியத்தில் தலா 25 குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக மண்டல கால்நடை இணை இயக்குநா் முருகன் தெரிவித்துள்ளது:

இத்திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 400 போ் வீதம் 5600 பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 25 அசில் ரக கோழிக் குஞ்சுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட உள்ள இத்திட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்த்தில் பதிவு பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அந்தந்த கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவா்களாக இருத்தல் வேண்டும். ஏற்கனவே, விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு அல்லது செம்மறியாடு மற்றும் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவா்கள், இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.விதவைகள், ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

30 சதவீதம் போ் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்கள் தோ்வு செய்யப்படுவா். தகுதியான ஏழைப் பெண் பயனாளிகள் தங்களது கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் செப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com