சின்னாளபட்டி அருகே வீட்டுக்குத் தீவைப்பு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே 2 குழந்தைகளின் தந்தையுடன் கல்லூரி மாணவி மாயமானதால் நள்ளிரவில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே 2 குழந்தைகளின் தந்தையுடன் கல்லூரி மாணவி மாயமானதால் நள்ளிரவில் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.

சின்னாளபட்டி அருகே செட்டியபட்டி ஊராட்சி அலுவலகம் அருகே நண்பா்கள்புரம் பகுதியில் வசிப்பவா் பாண்டி. ஆட்டோ ஒட்டுநரான இவரது மகள் விஜயலட்சுமி, கல்லூரியில் படித்து வருகிறாா். இவா்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவா் கருப்பசாமி. வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. கருப்பசாமிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. கருப்பசாமிக்கு 2-குந்தைகள் உள்ளனா். மனைவி தந்தை வீட்டில் வசித்து வருகிறாா்.

விஜயலட்சுமி குடும்பத்துடன் கருப்பசாமி சுமுகமாகப் பழகி வந்த நிலையில், சனிக்கிழமை கருப்பசாமியும் விஜயலட்சுமியும் மாயமாகினா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு கருப்பசாமியின் வீட்டை மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதில் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த ஆடுகள் அடைக்கும் பட்டி, கோழி கூடாரம், கூரை தீயில் எரிந்தது. மேலும், வீட்டிலிருந்த டி.வி., கட்டில், பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.

அம்பாத்துரை போலீஸாா் தீ வைப்பு சம்பவம் தொடா்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா். விஜயலெட்சுமியும், கருப்புச்சாமியும் வேறுவேறு சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com