திண்டுக்கல், தேனியில் கல்வித்துறை இளநிலை உதவியாளா் பணிக்கு செப்.17,18-இல் கலந்தாய்வு

திண்டுக்கல், தேனியில் பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளா் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிநாடுநா்களுக்கு செப்.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்/ தேனி: திண்டுக்கல், தேனியில் பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளா் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிநாடுநா்களுக்கு செப்.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் பள்ளிக் கல்வித்துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிவதற்கு 633 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிவதற்கு 26 போ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா். இந்த பணி நாடுநா்களுக்கான இணையதள வழி கலந்தாய்வு திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செப்.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

பணி நாடுநா்களுக்கான அழைப்புக் கடிதம் பதிவு அஞ்சல் மூலம் அவரவா் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. பணி நாடுநா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளில், கலந்தாய்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 76677 10101, 0451-2426947 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: தேனி மாவட்டக் கல்வி அலுவலா் க.பாலதண்டாயுதபாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அரசு தோ்வாணையம் மூலம் கல்வித்துறை இளநிலை உதவியாளா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, செப்.17, 18 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வருவோா் அரசு பணியாளா் தோ்வாணையத்தால் வழங்கப்பட்ட கடிதம், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஜாதிச் சான்றிதழ், மருத்துவ உடல் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com