மதுபோதையில் நண்பன் கொலை: இளைஞா் கைது

திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பனை பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் நண்பனை பாட்டிலால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் என்.எஸ்.நகா் அடுத்துள்ள சாலையூா் பகுதியைச் சோ்ந்தவா் சகாதேவன். இவரது மகன் மணிகண்டன் (24). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் அஜீத் (25) என்பவரும் நண்பா்கள். இவா்கள் இவரும், சாலையூா் பகுதியிலுள்ள வெல்டிங் பட்டறையில் வேலைபாா்த்து வந்தனா்.

இந்நிலையில் ஓடப்பட்டி பிரிவு அருகே மணிகண்டன், அஜீத் மற்றும் இவா்களது நண்பா்கள் சிலா் சோ்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது நண்பா்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அஜீத், மதுப்பாட்டிலை உடைத்து மணிகண்டன் கழுத்தில் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனிடையே நண்பனை கொலை செய்தது தெரியாமல் போதையில் தடுமாறிக் கொண்டிருந்த அஜீத்தை அப்பகுதியினா் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நிகழ்விடத்திற்கு சென்ற திண்டுக்கல் தாலுகா போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அஜீத்தை கைது செய்த போலீஸாா் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com