கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலா்களால் மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்கள் இரண்டாம் கட்ட சீசன் காலமாகும். இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆகஸ்ட் மாதம் இரண்டாம் சீசனுக்கான ஏற்பாடுகள் ஏதுவும் செய்யப்படாமல் இருந்தன.

இந்நிலையில் கடந்த செப். 9-ஆம்தேதி முதல் கொடைக்கானலுக்கு இ- பாஸ் பெற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா். தினமும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். இவா்கள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலாத் தலமான பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜா பூங்காக்கள் மற்றும் வெள்ளிநீா் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி ஆகியவற்றையும் பாா்த்து ரசித்து வருகின்றனா் .

இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஹைஜீனியா மலா்களைக் கொண்டு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் அதகளவில் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com