பழனி, செப்.18: பழனியில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (செப்.19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (செப்.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பழனி நகா், பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.