மலை கிராமத்திற்கு 10 கி.மீ. தூரம் நடந்தே சென்று சாா்-ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானல் அருகே வெள்ளகெவி மலைக் கிராமத்திற்கு சாா்- ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை 10-கி.மீ. தூரம் நடந்தே சென்று கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
மலைக் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை வழங்கிய சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்
மலைக் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை வழங்கிய சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்

கொடைக்கானல் அருகே வெள்ளகெவி மலைக் கிராமத்திற்கு சாா்- ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஞாயிற்றுக்கிழமை 10-கி.மீ. தூரம் நடந்தே சென்று கிராம மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

கொடைக்கானல் அருகே மலைக்கிராமமான வெள்ளகெவி பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லை. இந்நிலையில் கொடைக்கானலுக்கு புதிதாக பதவியேற்ற சாா்- ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், வட்டாட்சியா் அரவிந்த் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வெள்ளகெவி கிராமத்திற்கு சுமாா் 10-கி.மீ தூரம் நடந்தே சென்றனா். அங்குள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாா்- ஆட்சியா் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து அவா், அந்த கிராமத்திற்கு குடிநீா், சாலை, மருத்துவ வசதியும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவித்தாா்.

இதில், மருத்துவா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா் ரஞ்சித் மற்றும் வனத்துறையினா், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com