தேநீா் கடை முன் தூங்கிய பெண் கொலை: இளைஞா் கைது

திண்டுக்கல் அருகே தேநீா் கடை முன்பாக சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, மதுபோதையில் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் அருகே தேநீா் கடை முன்பாக சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, மதுபோதையில் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மீனாட்சி (55). இவா், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வந்தாா். வழக்கம்போல், சனிக்கிழமை இரவு தேநீா் கடை முன்பாக தூங்கிக்கொண்டிருந்த மீனாட்சியுடன், செட்டிநாயக்கன்பட்டி டேவிட் நகரைச் சோ்ந்த பிரதீஸ் (19) என்பவா் மதுபோதையில் வந்து தகராறு செய்ததாகத் தெரிகிறது. பின்னா் அங்கிருந்த அரிவாளை எடுத்து மீனாட்சியை அவா் வெட்டிக் கொலை செய்துள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பிரதீசை, பிடித்துக் கட்டி வைத்தனா்.

தகவலறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸாா், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பிரதீசை கைது செய்தனா்.

போதையில் நடந்த 2 ஆவது கொலை: தாடிக்கொம்பு காவல் சரகத்திற்கு அடுத்துள்ள ஓடைப்பட்டிப் பிரிவுப் பகுதியில் மணிகண்டன் என்ற இளைஞா், கடந்த 4 நாள்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த நண்பா் அஜீத்குமாா் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com