திண்டுக்கல், செப்.20: வே. குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி செவ்வாய்க்கிழமை (செப்.22) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துபாண்டியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வாா்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணாா்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூா், சின்னமுளையூா், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, எஸ்.கொடை மற்றும் ராமராஜபுரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.