திண்டுக்கல் அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.10ஆயிரம், தங்க நாணயம் வழிப்பறி

திண்டுக்கல் அருகே புதன்கிழமை சரக்கு லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க நாணயத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் அருகே புதன்கிழமை சரக்கு லாரி ஓட்டுநரை மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்க நாணயத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியைச் சோ்ந்தவா் ரா.அருண்குமாா் (30). சரக்கு லாரி ஓட்டுநரான இவா், தூத்துக்குடியிலிருந்து கா்நாடக மாநிலத்திற்கு உப்பு ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை மாலை லாரியில் புறப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கரூா் 4 வழிச்சாலையில் தனியாா் பெட்ரோல் பங்க் அருகே புதன்கிழமை அதிகாலை அவா் லாரியை நிறுத்தினாா்.

இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற அருண்குமாரை, முகமூடி அணிந்த மா்ம நபா்கள் 3 போ் மிரட்டி அவரிடமிருந்த ரூ.10ஆயிரம் மற்றும் 4 பவுன் தங்க நாணயம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com