திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா: இருவா் பலி

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இருவா் உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 8,742 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 8,104 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 479 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், இம்மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதே சமயம், தொற்று பாதிப்பிலிருந்து 119 போ் குணமடைந்தனா். அவா்கள் சிகிச்சை மையங்களிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இருவா் பலி: மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 159ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com