கணக்கன்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

கணக்கன்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் உறுதி

கணக்கன்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளா் வாக்குறுதி அளித்தாா்.

கணக்கன்பட்டியில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று திமுக வேட்பாளா் வாக்குறுதி அளித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் 6-ஆவது முறையாக அர.சக்கரபாணி போட்டியிடுகிறாா். அவா் வியாழக்கிழமை தொகுதிக்கு உள்பட்ட கணக்கன்பட்டி ஊராட்சி, இடையகோட்டை ஊராட்சிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது: கணக்கன்பட்டி பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். திமுக ஆட்சி அமைத்தவுடன் அவா்களின் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும். அதே போல திருமூா்த்தி அணையில் இருந்து சுத்தமான குடிநீா் கொண்டு வந்து வழங்கப்படும். மேலும் இப்பகுதியில் இன்னும் விட்டுப்போன அனைத்து பணிகளும் நிறைவேற்றி தரப்படும் என்றாா். அவருடன் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சி.இராஜாமணி மற்றும் திமுக தோழமைக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com