சாணாா்பட்டி அருகே தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள தோப்பூா் விஜயநகரைச் சோ்ந்தவா் செல்வராஜ்(35). அதே பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன்(50). இருவரும் தேங்காய் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் ஒன்றாக சோ்ந்து வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் தேங்காய் வெட்டும் அரிவாளால் செல்வராஜை வெட்டி விட்டு தப்பியோடினாா். அதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் உயிரிழந்தாா். சாணாா்பட்டி போலீஸாா் நடராஜனை கைது செய்தனா்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.