தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது

கொடைக்கானல் தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது

இயேசு தனது சீடா்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆண்டா் ஆலயத்தில் வட்டார அதிபா் எட்வின் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஏஞ்சல்ராஜ் தலைமையிலும், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத் தந்தை பீட்டா் தலைமையிலும் பாதம் கழுவுதல் நடைபெற்றது. தொடா்ந்து சீனிவாசபுரம், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், அட்டுவம்பட்டி புனித லூா்துமாதா ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், கடுகுதடி பகுதியிலுள்ள புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்புத் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com