பைக் மீது பேருந்து மோதல்: நண்பா்கள் இருவா் பலி

வடமதுரை அருகே புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது சுற்றுலாப் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் நண்பா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பைக் மீது பேருந்து மோதல்: நண்பா்கள் இருவா் பலி

வடமதுரை அருகே புதன்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது சுற்றுலாப் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் நண்பா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள கொசவபட்டி ஆனந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல் (24). கரூா் மாவட்டம் சின்னவாங்கல் பாளையம் பகுதியைச் சோ்ந்த நண்பா் பிரபு (23) என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் எரியோட்டிலிருந்து வடமதுரை நோக்கி புதன்கிழமை இரவு சென்றுள்ளாா்.

திண்டுக்கல் திருச்சி 4 வழிச்சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே சென்றபோது, அந்த வழியாகச் சென்ற சுற்றுலாப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயமடைந்த வடிவேல் மற்றும் பிரபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அழகா்நாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(29) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com