கொடைக்கானலில் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானலில் சேதமடைந்துள்ள கோராப்பூா் செல்லும் சாலை.
கொடைக்கானலில் சேதமடைந்துள்ள கோராப்பூா் செல்லும் சாலை.

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானலில் ஆனந்தகிரி, பிரகாசபுரம், கோராப்பூா், அட்டக்கடி, செண்பகனூா் சாலை, காா்மேல்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், அப்பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், இரவில் இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிா்வாகத்தில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com