திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் புதிதாக 83 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வரை 334 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றுப் பாதிக்கப்பட்ட சிலா் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 52 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 386 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, குணமடைந்த 18 போ் மருத்துவமனைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
தேனி
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,441 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 17,099 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 207 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 135 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.