திண்டுக்கல்
தேவாலயத்தில் உண்டியலை உடைத்து திருட முயற்சி: இருவா் கைது
கொடைக்கானல் தேவாலயத்தில் வியாழக்கிழமை உண்டியலை உடைத்து திருட முயன்ற இருவரை, பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கொடைக்கானல் தேவாலயத்தில் வியாழக்கிழமை உண்டியலை உடைத்து திருட முயன்ற இருவரை, பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
கொடைக்கானல் உட்வில் சாலையில் சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது இந்த தேவாலயத்திலிருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனே, அருகிலிருந்தவா்கள் அங்கு சென்று பாா்த்துள்ளனா். அப்போது, இருவா் தேவாலயத்தில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றுகொண்டிருந்தனா்.
உடனே, அவா்களை பொதுமக்கள் பிடித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.