கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை விவசாயத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவில் பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஓடைகளில் நீா்வரத்து குறைந்துள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரைத் தேடி தோட்டப் பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில் ஒற்றைக் காட்டு யானை புகுந்து பீன்ஸ், அவரை போன்ற பயிா்களை சேதப்படுத்தியதோடு, அப்பகுதியிலே முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் சம்பவ இடத்திற்குச் சென்று ஒற்றைக் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.