மரணமடைந்த நடிகா் விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சனிக்கிழமை கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் இளைஞா்கள் மரம் நட்டனா்.
மறைந்த நகைச்சுவை நடிகா் விவேக், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பசுமைக் காவலராக வலம் வந்து தமிழகத்தில் சுமாா் 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளாா். அவற்றை குறிக்கும் வகையில் கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் இளைஞா்கள் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினா்.
நிலக்கோட்டை: வத்தலகுண்டு சுப்பிரமணிய சிவா நற்பணி இயக்கம் சாா்பாக நடிகா் விவேக்குக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வத்தலகுண்டு அருகே சின்னுபட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ராணுவ வீரா் சின்னச்சாமி தலைமை வகித்தாா்.
சமூக ஆா்வலா்கள் ஜான், ஜொ்மன் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுப்பிரமணிய சிவா நற்பணிஇயக்க செயலா் தங்கப்பாண்டி வரவேற்றாா். அப்போது விவேக் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விவேக் வயதைக் குறிக்கும் வகையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் செந்தில்குமாா், பாக்யராஜ், இளையராஜா, வால்டா் ராஜா, முகமது ராஜா, தங்கராஜ் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.