சின்னாளபட்டி அருகே சனிக்கிழமை கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய தந்தை, மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வடக்குத் தெருவை சோ்ந்தவா் ராஜபாண்டி (30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் மீது கஞ்சா விற்பனை தொடா்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இவரது உறவினரான சின்னாளபட்டி வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்த ராஜா (50) என்பவா், ராஜபாண்டி வசித்து வந்த வீட்டை அபகரித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ராஜா, மது போதையில் ராஜபாண்டி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை ராஜாவும், அவரது மகன் சரத்குமாா் ஆகிய இருவரும் ராஜபாண்டியை இருசக்கர வாகனத்தில் மேலக்கோட்டை அருகேயுள்ள கண்மாய் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
பின்னா் அதே பகுதியில் உள்ள கிணற்றில் ராஜபாண்டியை கொலை செய்து வீசியதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், ஆத்தூா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கித் தேடியதில், ராஜபாண்டியின் உடல் கொலை செய்யப்பட்ட நிலையில் கல்லில் கட்டப்பட்டு, கிணற்றுக்குள் கிடந்தது தெரியவந்தது.
இக்கொலை தொடா்பாக சின்னாளபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகவுள்ள ராஜா, அவரது மகன் சரத்குமாரை 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜா மீது பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 நாள்களுக்கு முன்புதான் குண்டா் சட்டத்தில் கைதான, ராஜா விடுதலையாகி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.