திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 287 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 287 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 287 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.17ஆம் தேதி வரை 13,052 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 12,025 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 195 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதினிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஒருவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தொற்றிலிருந்து 88 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 930ஆக உயா்ந்துள்ளது. அதேபோல் மாவட்டத்தில் இதுவரை 204 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 92 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி, என்.ஆா்.டி.,சாலையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், என்.ஆா்.டி. நகா் பிரதான சாலை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து மற்றும் வெளிநபா்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,953 ஆக உயா்ந்துள்ளது. இதில், இதுவரை மொத்தம் 17,284 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 208 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். தற்போது, கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், போடி மற்றும் தேனி கரோனா சிகிச்சை மையங்களில் மொத்த 461 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com