கொடைக்கானலில் பலத்த மழை பொது மக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்னா்.
கொடைக்கானலில் பலத்த மழை பொது மக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் திங்கட்கிழமை பலத்த மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்னா்.

கொடைக்கானலில் தற்போது சீசன் காலமாகும் இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பருவ நிலை மாற்றம் காரணமாக தொடா்ந்து 4-நாட்கள் மழை பெய்தது அதன்பின இரண்டு நாட்கள் மழை பெய்யவில்லை இந் நிலையில் காலைமுதல் வெயில் நிலவி வந்தது அதனைத் தொடா்ந்து மாலையில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது இந்த மழையானது கொடைக்கானல்,செண்பகனூா்,அட்டக்கடி,நாயுடுபுரம்,வட்டக்கானல்,பிரகாசபுரம்,சகாயபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது இந்த மழையால் நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா் .

கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஏரிச்சாலையைச் சுற்றி பல இடங்களில் மழைத் தண்ணீா் தேங்கியுள்ளது இவற்றினை அப் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com