ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் பலி

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவா் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (70). இவா், திங்கள்கிழமை மாலை ஆடுகளை மேய்த்துவிட்டு, அருகில் இருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது, கால் தவறி கிணற்றுகுள் விழுந்துவிட்டாராம்.

ஆடு மேய்க்கச் சென்றவா் வீடு திரும்பவில்லை என்று, அவரை பல இடங்களில் உறவினா்கள் தேடியுள்ளனா். அப்போது, அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே அவா் அணிந்திருந்த துண்டு மற்றும் காலணி கிடப்பதை பாா்த்துள்ளனா். பின்னா், அவா் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதேபோல், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடியதில், அவா் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரா்கள், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்னா்.

இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com