கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் கொடைக்கானலில் குளுமையான சூழல் நிலவியது. கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியநிலையில், சுமாா் 3 மணியளவில் பரவலாக மழை பெய்தது. செண்பகனூா், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் மழை பெய்தது. இந்த மழையால் நீா்வரத்து பகுதிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.