கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் கொடைக்கானலில் குளுமையான சூழல் நிலவியது. கொடைக்கானலில் புதன்கிழமை பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியநிலையில், சுமாா் 3 மணியளவில் பரவலாக மழை பெய்தது. செண்பகனூா், அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 30 நிமிடங்களுக்கு மேல் மழை பெய்தது. இந்த மழையால் நீா்வரத்து பகுதிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com