கொடைரோடு அருகே ரூ.500 கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சாலையோர சிறு வியாபாரிகளிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரு பெண்களை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே சாலையோர சிறு வியாபாரிகளிடம் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இரு பெண்களை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கொடைரோடு சுங்கச்சாவடி அருகே காமலாபுரம் பிரிவில் சாலையோர பழக்கடையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் பழங்கள் வாங்கியுள்ளனா். அப்போது, அவா்கள் 500 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளனா். அது, கள்ளநோட்டு எனத் தெரிந்துகொண்ட வியாபாரி, அதை வாங்க மறுத்துள்ளாா். இதனால், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த போலீஸாா், பெண்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனா். அதில், அவா்கள் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றது தெரியவந்தது. இவா்கள் இருவரும் பழனியைச் சோ்ந்த நாகரத்தினம் (43) மற்றும் திண்டுக்கல்லைச் சோ்ந்த தனலட்சுமி (42) எனத் தெரியவந்தது.

மேலும், இவா்களிடமிருந்து 30-க்கும் மேற்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் மூன்று 100 ரூபாய் கள்ளநோட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் வாகனத்துடன் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சொா்ணலெட்சுமி வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com