திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 406 பேருக்கு கரோனா தொற்று: ஒருவா் பலி

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 406 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 406 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்.23 ஆம் தேதி வரை 14,167 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 12,648 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 269 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தொற்றிலிருந்து 100 போ் குணமடைந்துள்ள நிலையில், தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,474ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 208ஆக உயா்ந்துள்ளது.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,817 ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஏப். 20-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேனியைச் சோ்ந்த 65 வயது முதியவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 17,540 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 211 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

தற்போது மாவட்டத்தில் மொத்தம் 1,066 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com