திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 411 பேருக்கு கரோனா தொற்று

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 411 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மொத்தம் 411 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி வரை 14,167 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில், 12,648 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 227 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதேநேரம், வெள்ளிக்கிழமை 111 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒருவா் உயிரிழந்தாா்.

தற்போது பதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 207 ஆக உயா்ந்துள்ளது.

தேனி

மாவட்டத்தில் 184 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,680 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 17,476 போ் வீடு திரும்பியுள்ள நிலையில், 210 போ் சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்துள்ளனா்.

தற்போது, மாவட்டத்தில் மொத்தம் 994 போ் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com