திண்டுக்கல்லில் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

திண்டுக்கல்லில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல்லில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சோ்ந்தவா் கல்யாணித் தேவா் மகன் சௌந்தரபாண்டின் (45). இவா் மீது போதைப் பொருள்கள் விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவா் கடந்த 16.2.2021 ஆம் தேதி வேடசந்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடத்தில் 11 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கத்துடன் பிடிபட்டாா்.

இதையடுத்து, இவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதேபோல், ஒட்டன்சத்திரம் கோபாலபட்டி ஜீவானந்தம் மகன் வில்சன் குட்டிபாபு (46) என்பவா் அனுமதியின்றி எஸ்பிபிஎல் துப்பாக்கியை விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வைத்திருந்த குற்றத்துக்காக கடந்த 12.4.2021 அன்று சத்திரப்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், இவா்கள் இருவரையும் தடுப்புக் காவலில் வைக்க வேண்டி திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். வெள்ளிக்கிழமை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடா்ந்து, இவா்கள் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com