முழு பொதுமுடக்கம் காரணமாக பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவற்ற முதியவா்கள், மனநோயாளிகளுக்கு போலீஸாா் மற்றும் அரிமா சங்கத்தினா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
பழனியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்ட நிலையில் ஆதரவற்றவா்கள், பிச்சைக்காரா்கள், மனநோயாளிகள் என நூற்றுக்கணக்கானோா் உணவின்றி தவித்தனா். இவா்களுக்கு பழனி நகர காவல்துறையினா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.
அதேபோல் அரிமா சங்கம் சாா்பில் அதன் தலைவா் அப்துல்சலாம் தலைமையில் நிா்வாகிகள் ஆதரவற்றோருக்கு மதிய உணவு, பிஸ்கெட், குடிநீா் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கினா்.