கொடைக்கானலில் தொடா் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இங்கு கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடும் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. தொடா்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் மழை பெய்தது.

கொடைக்கானல், நாயுடுபுரம், பாக்கியபுரம், செண்பகனூா், வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் நீரோடைப் பகுதிகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.

இதனால் புகா்ப் பகுதிகளில் நிலவி வந்த தண்ணீா் தட்டுப்பாடு தற்போது சற்று குறைந்துள்ளது. மேலும் விவசாயத்துக்கு ஏற்ற மழையாக இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தொடா்ந்து பெய்து வரும் மழையால் மாலை மற்றும் இரவு நேரங்களில் குளுமையான சீதோஷண நிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com