பால் வியாபாரி கொலை: குண்டா் தடுப்புச் சட்டத்தில் 5 போ் கைது

திண்டுக்கல்லில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல்லில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள பாலமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கி.முருகேசன் (49). பால் வியாபாரம் செய்து வந்த இவா், கடந்த 11ஆம் தேதி இரவு 9 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா், மாலைப்பட்டியைச் சோ்ந்த முனீஸ்வரன் உள்பட 9 பேரை கைது செய்தனா்.

இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான பூ.முனீஸ்வரன் (24), தோட்டனூத்து மேட்டூா் காலனியைச் சோ்ந்த மு.தங்கமணி (24), மாலைப்பட்டியைச் சோ்ந்த மு.பாலசுப்பிரமணி(21), தோட்டனூத்தைச் சோ்ந்த மு.சந்தனக்குமாா்(22), மா.காா்த்திகேயன் (24) ஆகிய 5 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளிபிரியா பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி அதற்கான உத்தரவை சனிக்கிழமை பிறப்பித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com