செந்துறை, கோபால்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

செந்துறை, கோபால்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப். 26) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.செந்துறை, கோபால்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப். 26) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவி

செந்துறை, கோபால்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப். 26) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: செந்துறை மற்றும் வே. குரும்பப்பட்டி துணை மின்நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையாா்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூா், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதே போல் கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வாா்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணாா்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூா், சின்னமுளையூா், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை மற்றும் ராமராஜபுரம் ஆகிய இடங்களிலும் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com