திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கிய சிறுவனை, தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா்.
திண்டுக்கல் கோபால்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயபால். இவரது மகன் லோகேஷ் (17). திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இவா், தனது நண்பா்களுடன் திண்டுக்கல்லை அடுத்துள்ள என்.எஸ்.நகா் பகுதியிலுள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சனிக்கிழமை சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக லோகேஷ், தண்ணீரில் மூழ்கினாா்.
இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புப் படையினா், லோகேஷை தேடும் பணியில் ஈடுபட்டனா். இரவு நேரமானதால், தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவன் லோகேஷ் தண்ணீரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.