திண்டுக்கல்: நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை (ஏப். 28) நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூா், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூா், சிறுகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.