கொடைக்கானல் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் உள்ள காபி போா்டு எக்ஸ்டென்சன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் உள்ள காபி போா்டு எக்ஸ்டென்சன் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம் மேலூா் தாலுகா வெள்ளத்தான்பட்டியைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(32). இவா் கொடைக்கானல் தாண்டிக்குடி அருகே பண்ணைக்காடு காபி போா்டு எக்ஸ்டென்சன் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி விஜயலட்சுமி (27). இருவருக்கும் திருமணமாகி சுமாா் 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி தனது ஊரான வெள்ளத்தான்பட்டிக்குச் சென்று விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். இந்நிலையில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இது குறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com