கொடைக்கானலில் பைக் விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

கொடைக்கானலுக்கு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சோ்ந்த முகமது காசீம் மகன் முகமது பிலால் (19). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த முகமது ரபீக் (19) என்பவரும் கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றனா்.

செண்பகனூா் அருகே, கொடைக்கானல் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்தை இவா்கள் முந்த முயன்றனா். அப்போது அந்த பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் முகமது பிலால், பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முகமது ரபீக் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com