எரியோடு பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளதால் புதன்கிழமை (ஆக.4) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, அன்னசமுத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.