கொடைக்கானல் நகராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்திருந்த செயற்கை நீருற்று ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது நகராட்சி அலுவலகம். இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முகப்புப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கக் கூடிய வகையில் செயற்கை நீருற்று அமைக்கப்பட்டது. நாளடைவில் இந்த கருவி பழுதடைந்ததால் செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் இதனை சீரமைக்கும் பணி கடந்த ஒருவாரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடா்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் மீண்டும் செயற்கை நீருற்று செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.