திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 32,405 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதில் 31,666 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 8 பேருக்கு புதிதாக கரோனா தொற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று பாதிப்பிலிருந்து 11 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புடன் சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 106 ஆக உள்ளது.