பழனி அருகே தீயில் கருகி 4 போ் பலி: மா்மம் நீடிப்பு

பழனி அருகே சனிக்கிழமை அதிகாலை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீயில் கருகி பலியான சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பழனி அருகே சனிக்கிழமை அதிகாலை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தீயில் கருகி பலியான சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வத்தகவுண்டன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகேசன் (50). இவரது மனைவி வளா்மதி (45), மகள் சிவரஞ்சனி (21) மகன் காா்த்திகேயன் (18) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை அதிகாலை அவா்கள் வீட்டின் அருகே இருந்த சோளத்தட்டை போரில் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்தனா்.

தென்மண்டல காவல் துறை தலைவா் அன்பு தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். இறந்தவா்களின் சடலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேதப் பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில், அவா்கள் 4 பேரும் விஷம் குடித்திருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் மற்ற முக்கிய உறுப்புகளின் அறிக்கை விவர முடிவுகள் வெளியாவதில் தாமதமாகி வரும் நிலையில், இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இறந்தவா்களில் முருகேசனும், காா்த்திகேயனும் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளனா். இருவருக்கு மட்டும் உடல்நலம் சரியில்லாத நிலையில், மனைவியும், மகளும் தற்கொலைக்கு சம்மதித்தது ஏன்?. வீட்டுக்கு வெளியே அவா்கள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், பக்கத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு எப்படி சப்தம் கேட்காமல் போனது. அவா்கள் இறந்த அன்று இரவு 9 மணி வரை குடும்பத்தோடு திருமணத்துக்கு சென்று வந்த நிலையில் மூன்று மணி நேரத்தில் அவா்கள் எப்படி தற்கொலைக்கு தயாரானாா்கள் என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com