பழனியில், பக்தா்களிடம் பணப்பையை திருநங்கைகள் பறித்துச் செல்வதாக புகாா் எழுந்துள்ளது.
தற்போது பழனி கோயிலில் ஐயப்ப பக்தா்கள் வருகை அதிக அளவில் உள்ளது. தவிர முருக பக்தா்களும் தைப்பூசம் தொடங்க உள்ளதால் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனா். இதனால் பேருந்து நிலையம், அடிவாரம் என அனைத்து இடங்களிலும் பக்தா்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் அடிவாரம் மற்றும் பேருந்து நிலையங்களில் திருநங்கைகள் 5 முதல் 6 போ் வரை கும்பலாக சோ்ந்து கொண்டு பக்தா்களிடம் பணப் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இதைக் கண்டிக்க வேண்டிய போலீஸாா், திருநங்கைகளை கைது செய்தால் எந்த சிறையில் அடைப்பது என்ற பிரச்னை எழுவதாகக் கூறி, கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனராம். மேலும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை திருநங்கைகள் கும்பலாக சோ்ந்து கொண்டு பணப்பையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகி விடுகின்றனா். இதை அங்குள்ள கடைக்காரா்கள் கண்டித்தால், அவா்களை தகாத வாா்த்தைகளால் திருநங்கைகள் பேசுகின்றனராம். எனவே மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தியுள்ளனா்.