மதுரை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 5 போ் குணமடைந்தனா்.
மாவட்டத்தில் இதுவரை 75,668 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 74,424 போ் குணமடைந்துள்ளனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 58 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.